சனி மஹா தசையில் கேது புக்தி ஒரு வருஷம், ஒரு மாதம். ஒன்பது நாட்கள் இருக்கும்.
கேது பகவான் மேஷம், ரிஷபம், கடகம், விருச்சிகம், மகர ராசியிலும், தசாநாதனாகிய சனி பகவானுக்கு கேந்திர ஸ்தானத்தில் இருந்து புதன், குரு, சுக்கிரன் இவர்களுடைய பார்வை பெற்றால் பெரியோர் சேர்க்கை, பகவத் கைங்கர்யத்தில் ஈடுபடுதல், விரதங்களை அனுஷ்டித்தல், பொருள் சேர்க்கை, செல்வப் பெருக்கு குடும்பத்தில் நிறைவு எல்லாம் சுப பலன்களாகவே ஏற்படும்.
ஆனால் புக்தி நாதனாகிய கேது தசாநாதனாகிய சனிக்கு
மறைவு ஸ்தானத்திலும்
ஸ்தானத்திலும் இருந்தால்
ஜனன லக்னத்திற்கு மறைவு துர்பலன்கள்தான் ஏற்படும். ஜனங்களின் பகை, காரியக்கேடு, வீண் அலைச்சல், பலவித கஷ்டம் இவைகள் பலன்களாம்.