அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்த ஒவ்வொரு நண்பர்களும் கண்டிப்பாக ஸ்ரீ லட்சுமி நாராயணனை வழிபாடு செய்வது சிறப்பு ஏன் என்றால் லட்சுமி நாராயணன் என்பவர் உங்களுக்கென்று படைக்கப்பட்ட கடவுள் அவர் ஒருவர் தான் உங்கள் வாழ்க்கையை முன்னேற்றக் கூடியவர் உங்கள் வாழ்க்கையில் பல நன்மைகளைச் செய்யக் கூடியவர் பல சிக்கல்களில் இருந்து உங்களை விடுபட செய்யக் கூடியவர் ஸ்ரீ லட்சுமி நாராயணர் என்பதை மனதில் நிறுத்திக் கொண்டு அவர் உங்களுக்கான அதிதேவதை என்பதையும் நீங்கள் மனதில் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
ஆக அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்த ஒவ்வொரு பிள்ளைகளும் கண்டிப்பாக ஸ்ரீ லட்சுமி நாராயணனின் வழிபாடு செய்து விட்டு எந்த ஒரு சுபகாரியமாக இருந்தாலும் செய்ய வேண்டும் புதிதாக தொழில் தொடங்கினாலும் சரி அவ்வபோது ஸ்ரீ லட்சுமி நாராயணரின் உடைய புகைப்படத்தை உங்கள் பாக்கெட் பையில் வைத்துக் கொள்வது சிறப்பு ஏனென்றால் அவர் ஒருவரே உங்களை குறித்தானவர். அதை மட்டும் நீங்கள் மனதில் நிறுத்திக் கொள்ள வேண்டும்.