எப்போது திருமண வரன் பார்க்க ஆரம்பிக்க வேண்டும் கடக ராசியில் பிறந்தவர்கள் என்றால் குரு பலன் கடக ராசிக்கு வரும்போது நீங்கள் திருமணத்தைப் பற்றி பேசுவதோ அல்லது திருமணத்திற்கு வரன் பார்ப்பதோ ஒரு மிக சிறந்த காலமாக கருதப்படுகிறது.
எப்போதும் குரு பலன் வராமல் நீங்கள் பெண் பார்த்தால் திருமணம் தடைபட்டு தான் போகும் வரன் அமைந்தாலும் ஏதாவது ஒரு தடைப்பட்டு கொண்டே இருக்கும் ஒன்று குரு பலன் ஆணுக்கு இருக்க வேண்டும் அல்லது ஒன்று குரு பலன் பெண்ணுக்கு இருக்க வேண்டும் அப்படி யாரேனும் ஒருவருக்கு இருந்தால் கூட நாம் திருமணம் ஒன்றை வைத்து ஒன்று பண்ணலாம் ஆனால் நாம் அடுத்தவர்களை பார்ப்பதை விட நம்மை நாம் பார்ப்பது மிக மிக அவசியம்.
ஆகையால் கடக ராசியில் பிறந்தவர்கள் திருமணம் எப்போது நடக்கும் என்று கேட்பதற்கு பதிலாக உங்களுடைய ஜாதகத்தை எடுத்துக் கொண்டு போய் ஒரு ஜோதிடரிடம் கொடுத்து எப்போது எனக்கு குரு பலன் ஆரம்பிக்கும் என்று கேட்டு அந்த நேரத்தில் நீங்கள் வரன் பார்க்க ஆரம்பித்தால் கண்டிப்பாக திருமணம் நடந்து முடிந்து விடும் என்பதில் எந்தவித சந்தேகமும் வேண்டாம்.
அந்த வகையில் இந்த ஏப்ரல் மாதம் 22ஆம் தேதி உங்களுக்கு குரு பெயர்ச்சி ஆரம்பித்துவிட்டது. ஒரு ஆண்டு குரு உங்களுடைய ராசியில் இருக்கின்றார் இந்த ஓராண்டு நீங்கள் நல்ல தொழில் தொடங்கினால் முன்னேற்றம் மற்றும் திருமணமாகாமல் இருக்கக்கூடியவர்களுக்கு திருமணம் ஆகக்கூடிய வாய்ப்புகள் மிகவும் அதிகமாக இருக்கிறது.
அது மட்டுமல்லாமல் திருமணம் ஆனவர்கள் இன்னொரு பெண் மீது ஈர்ப்பு ஏற்படும் இந்த குரு பலன் ஒரு வாய்ப்பு கொடுக்கிறது நீங்கள் குடும்ப வாழ்க்கையில் பிரச்சனைகள் அனுபவிக்காமல் இருக்க வேண்டும் என்றால் இந்த குரூபாலனின் உங்களுடைய ஆசைகளை திருமணம் ஆகி இருந்தால் தவிர்ப்பது நல்லது.
