மாமியார் மருமகள் சண்டை வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும் மற்றும் மாமியார் மருமகள் சண்டை வராமல் இருக்க ஜாதக பொருத்தம் ஏதாவது இருக்கிறதா வாருங்கள் தெரிந்து கொள்வோம்

மாமியார் மருமகள் சண்டை வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி கண்டிப்பாக ஒவ்வொரு குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் தெரிந்து கொள்ள வேண்டியது மிக முக்கியம் எப்படி தன் பிள்ளைக்கு திருமணம் செய்யும்போது நாம் ஜாதக பொருத்தம் பார்க்கின்றோமோ அதுபோல மாமியார் மருமகள் சண்டை வராமல் இருக்க அவர்கள் இரண்டு பேர் ஜாதகத்தையும் பார்ப்பது நல்ல விஷயம் தான் இதில் எந்தவித தவறும் கிடையாது.
ஒரு வீட்டில் மாமியார் மருமகள் இரண்டு பேர் இருக்கின்றார்கள் இரண்டு பேரும் வேறு வேறு நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இந்த இரண்டு நட்சத்திரமும் பொருந்தாத சண்டை நட்சத்திரமாக இருந்தால் திருமணம் ஆன நாளிலிருந்து அடிக்கடி மாமியார் மருமகள் சண்டை வந்து கொண்டே இருக்கும் இது ஜோதிட ரீதியான சொல்லப்படும் உண்மை.

இப்ப மாமியார் மருமகள் சண்டை அடிக்கடி வருகிறது என்றால் கண்டிப்பாக நீங்கள் இரண்டு பேர் ஜாதகத்தையும் கொண்டு போய் ஒரு ஜோதிடரிடம் சொல்லும்போது அவர் இரண்டு பேர் என்னுடைய ஜாதகத்தை பார்த்து ஒத்துப் போகின்ற ஜாதகமா அல்லது சண்டை ஜாதகமா என்பதை பார்த்து சொல்வார் அல்லது ஒரு சில பரிகாரங்களை செய்வதன் மூலமாக இந்த மாமியார் மருமகள் சண்டை அங்கு நிப்பாட்டப்படுகிறது என்பது உண்மை.

சரி ஒரு வேலை இரண்டு ஜாதகமும் ஒத்துப்போகவில்லை அடிக்கடி சண்டை வந்து கொண்டிருக்கிறது என்றால் அவர்களிடம் கண்டிப்பாக யாராவது ஒருவர் தெரிவிக்க வேண்டும் அதாவது நம்முடைய ஜாதகம் இரண்டும் சரியாக ஒத்துப் போவது கிடையாதா அதனால் தான் நம் இருவருக்கும் சண்டை வந்து கொண்டிருக்கிறது என்ற புரிதலை அவர்களுக்குள் கொண்டு வர வேண்டும்.

புரிதல் இல்லாத ஒரு காரணத்தினால் தான் ஒரு வீட்டில் சண்டை அடிக்கடி வருகிறது அப்போ மாமியார் மருமகள் சண்டை நிறுத்துவதற்கு ஒரே வழி அவர்கள் இரண்டு பேரும் புரிந்து கொள்வதுதான் அது ஜாதக ரீதியாக ஒத்துப் போகவில்லை என்று சொன்னாலும் சரி அல்லது ஏதோ வேறு ஒரு காரணத்திற்காக சொன்னாலும் சரி ஆக மொத்தத்தில் உண்மை உண்மைதான்.

ஆனால் என்னதான் உண்மைகளை சுற்றி புரிய வைக்க வேண்டும் என்று நினைத்தாலும் ஜாதக ரீதியாக இரண்டு ஜாதகமும் ஒத்துப்போகவில்லை என்றால் கண்டிப்பாக அவர்கள் எலியும் பூனையும் ஆகத்தான் இருப்பார்கள் கடைசிவரை.