நீண்ட நாட்கள் கரையாத ரத்தக்கட்டு கரையும் எளிமையான வீட்டு மருத்துவ முறை / A simple home remedy to dissolve blood clots that have not dissolved for a long time / Ratha kattu:-
கையிலோ அல்லது காலிலோ ரத்தக்கட்டு இருந்தால் அது எப்படி நாம் எளிமையான வீட்டில் இருக்கக்கூடிய பொருளை வைத்தே குணப்படுத்தலாம் என்பதை பற்றி தான் இன்று நாம் இந்த பதிவில் பார்க்க போகின்றோம். இது முழுமையான வீட்டு மருத்துவம், எந்தவிதமான பக்க விளைவும் கிடையாது. சிறுவர் முதல் பெரிய வரை பயன்படுத்தலாம் அனைவருக்கும் 100 சதவீத பயன்களை தரக்கூடிய எளிமையான வீட்டு மருத்துவம் வாருங்கள் பார்க்கலாம். எப்படி நாம் எளிமையான முறையில் ரத்தக்கட்டை நீக்குவது அல்லது ரத்த கட்டை சரி செய்வது.
மூலப் பொருள்:-
புளியை கொதிக்க வைத்து நன்கு ஆற வைத்த பிறகு இளஞ்சூட்டுடன் அந்த புளியை, எங்கு ரத்தக் கட்டு உள்ளதோ அந்த வீக்கத்திற்கு பூசினால் எளிமையாக எவ்வளவு பெரிய ரத்தக்கட்டாக இருந்தாலும் நீங்கிவிடும்.
செய்முறை விளக்கம்:-
உங்கள் வீட்டில் இருக்கக்கூடிய கருப்பு புளியோ அல்லது வெள்ளைப் புளியோ எதுவாக இருந்தாலும் சரி அதை எடுத்துக்கொண்டு, ஒரு பாத்திரத்தில் போட்டு நன்கு கொதிக்க வைக்க வேண்டும் நன்கு கொதித்த அந்த புலியை ஆற வைக்க வேண்டும், மிதமான சூடு கை வைத்தால் தாங்க கூடிய அளவு சூடு போதும் என்று தெரிந்த பிறகு. எங்கு உங்களுக்கு ரத்தக் கட்டு உள்ளதோ அதன் மீது தடவி விட வேண்டும். போட்டு தேய்க்க கூடாது தடவி விட வேண்டும் அப்படி காலை மாலை இரண்டு வேளை செய்து வந்தால் நிச்சயமாக நீங்காத ரத்தக் கட்டுகள் கூட நீங்கி உங்களுக்கு சுகம் பெறும்.
குறிப்பு:-
புலியை கொதிக்க வைத்து ஆற வைத்து மிதமான சூடு உங்கள் தோளுக்கு எதுவும் ஆகாது என்று தெரிந்த பிறகு அந்த சூட்டை பயன்படுத்த வேண்டுமே தவிர அதிகளவு கொதிக்க வைத்த அந்த புளியை எடுத்து தடவக்கூடாது. தெளிவாக புரிந்து கொள்ளுங்கள் மிதமான சூட்டோடு இருக்கக்கூடிய புளியை கொதிக்க வைத்த பிறகு அதை எங்கு ரத்தக்கட்டு உள்ளது. அந்த இடத்தில் தடவ வேண்டும் அதிகளவு சூடு இருக்கக்கூடிய புளி தடவினால் உங்களுடைய தோல் டேமேஜ் ஆகும், என்பதை புரிந்து கொள்ளுங்கள் அதனால் பார்த்து பக்குவமாக பயன்படுத்துங்கள் புரியவில்லை என்றால் ஒன்றுக்கு இரண்டு முறை இதை படியுங்கள் நிச்சயமாக உங்களுக்கு புரியும்..
