ஆதார் கார்டு மற்றும் பான் கார்டு இரண்டையும் இணைக்க வேண்டும் என்று அரசாங்கம் ஆணை பிறப்பித்தது. முதலில் இலவசமாக இணைப்பதற்கான வழிகளை அரசாங்கம் ஏற்படுத்தியது, அதில் தவறியவர்களுக்கு 500 ரூபாய் என்று விகிதத்தில் அடுத்து ஒரு வாய்ப்பை கொடுத்தது. தற்போது வரை ஆயிரம் ரூபாய் பெனால்டி போட்டு அதன் மூலமாக இணைப்பதற்கான வழிகளை அரசாங்கம் கொடுத்துக் கொண்டிருக்கிறது, இதன் பிறகு மூன்று மாதம் கால அவகாசம் இணைப்பதற்கு நீடிக்கப்பட்டு இருக்கிறது..
ஆதார் கார்டு மற்றும் பான் கார்டு இணைக்கவில்லை என்றால் அடுத்து என்ன நடக்கும்.? What happens next if Aadhaar card and PAN card are not linked?
ஒருவேளை இந்த மூன்று மாத காலத்தில் ஆயிரம் ரூபாய் கொடுத்து நாம் பான் மற்றும் ஆதார் கார்டு இணைக்கவில்லை என்றால், அதன் பிறகு பத்தாயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என்ற ஒரு செய்தியும் உலவி கொண்டிருக்கிறது. இது எந்த அளவு உண்மை என்பதை நாம் பார்ப்பதற்கு முன் கட்டாயமாக அனைவரும் pan மற்றும் Aadhar இணைக்க வேண்டும் இல்லையென்றால் ஆயிரம் ரூபாயிலிருந்து கூடுதலாக அபராதம் கட்டி இனைக்க வேண்டிய சூழ்நிலைக்கு நாம் தள்ளப்படுவோம்.
முடிந்தவரை இந்த மூன்று மாத காலத்தில் பேன் கார்ட் மற்றும் ஆதார் கார்டை இணைத்து விடுங்கள்.
