அங்காரக தசையில் குரு புக்தி பதினோரு மாதங்கள் இருபத்தேழு நாட்கள்.
குருதேவருடைய புக்தி விசேஷத்தால் பெரியோர் சிநேகம் நல்லவர்களின் உதவி, எதிர்பார்க்கும் இனங்களில் லாபம் பகவத் தியானங்களில் ஈடுபடுதல் முதலிய நல்ல பலன்கள் உண்டாகும். ஆனால் குரு தேவர் ஜனன லக்னத்திற்கு திரிகோணம் கேந்திர ஸ்தானத்திலிருந்து தசாநாதனுடைய பார்வை பெற்றிருக்க வேண்டும்.
இதை விட்டு பகை, நீச்ச ஸ்தானத்திலிருந்தால் மனக் கவலைகளும், பலவகை நஷ்டங்களும், துன்பங்களும் ஏற்படும்.